பிரிந்து சென்ற மனைவியை சந்திக்க வந்த கணவர் அடித்து கொலை

கிருஷ்ணகிரி அருகே பிரிந்து சென்ற மனைவியை சந்திக்க வந்த கணவர் அடித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் ஐந்து பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

பிரிந்து சென்ற மனைவியை சந்திக்க வந்த கணவர் அடித்து கொலை

கிருஷ்ணகிரி அருகே பிரிந்து சென்ற மனைவியை சந்திக்க வந்த கணவர் அடித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் ஐந்து பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கர்நாடகா மாநிலம், மங்கம்மாபாளையத்தை சேர்ந்தவர் முகமது இம்ரான். ஒசூர் அருகேயுள்ள தொட்டபேளுர் கிராமத்தை சேர்ந்த பெண்ணை கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு மணம் புரிந்த இவர், கருத்து வேறுபாடு காரணமாக மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார். இந்த நிலையில், தனது மனைவியை பார்ப்பதற்காக தொட்டபேளூருக்கு வந்த  முகமது இம்ரானை, அவரது மனைவியின் உறவினர்கள் சிலர் அழைத்து சென்று கடுமையாக தாக்கியுள்ளனர்.

இதில் படுகாயமடைந்த முகமது,  சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த வழக்கில் தொட்டபேளுர் கிராமத்தை சேர்ந்த ஐந்து பேரை கைது செய்துள்ள போலீசார், அவர்களை சிறையில் அடைத்தனர்.