கள்ளச்சாராயம் காய்ச்சிய இந்து முன்னணி நிர்வாகிகள்,.! சிறையில் அடைத்த காவல்துறையினர்.!  

கள்ளச்சாராயம் காய்ச்சிய இந்து முன்னணி நிர்வாகிகள்,.! சிறையில் அடைத்த காவல்துறையினர்.!  

ஈரோடு மாவட்டம் கோபி அருகே கள்ளச்சாராயம் காய்ச்சிய இந்து முன்னணி நிர்வாகிகள் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். 

கோபி அருகே உள்ள கவுந்தப்பாடி பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதன் அடிப்படையில் போலீசார் அப்பகுதியில் திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது,  இந்து முன்னணி மாவட்ட செயலாளர் முருகேசன், இந்து முன்னணி மாவட்ட செயற்குழு உறுப்பினரான தாமரைச்செல்வன் மற்றும் அதிமுக இளைஞர் பாசறை செயலாளர் நேரு ஆகியோர் கள்ளச்சாராயம் காய்ச்சி வந்ததை கண்டுபிடித்தனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில் ஆட்டுப் பண்ணை வைக்க போவதாக கூறி நிலத்தை குத்தகைக்கு எடுத்து கள்ளச்சாராயம் காய்ச்சியது தெரியவந்தது. அதன்பின் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.