தாய் அடித்ததால் சிறுமி தூக்கிட்டு தற்கொலை!

சேலம் மாவட்டம், எடப்பாடி அருகே தாய் அடித்ததால் மனமுடைந்த 9 வயது சிறுமி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தாய் அடித்ததால் சிறுமி தூக்கிட்டு தற்கொலை!

சேலம் மாவட்டம், எடப்பாடி அருகே தாய் அடித்ததால் மனமுடைந்த 9 வயது சிறுமி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

எடப்பாடி அருகேயுள்ள கச்சுப்பள்ளி பகுதியை சேர்ந்தவர்கள் கணேசன் - பிரியா தம்பதி. கணேசன் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்த நிலையில், பிரியா பருத்தி ஆலையில் கூலி வேலைக்கு சென்று 2 குழந்தைகளை கவனித்து வந்துள்ளார். இந்நிலையில், நேற்றைய தினம் பிரியா தனது 9 வயது மகள், சாருநிதியை அடித்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த சிறுமி வீட்டில் தனது துப்பட்டாவில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், சிறுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.