திமுக பிரமுகர் பட்டறை சரவணன் மீது வெறிச்செயல்... மர்ம நபர்களுக்கு வலைவீச்சு!!

திமுக பிரமுகர் பட்டறை சரவணன் மீது வெறிச்செயல்... மர்ம நபர்களுக்கு வலைவீச்சு!!

திண்டுக்கல் அருகே, பிரபல ரவுடி பட்டறை சரவணன், அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

திண்டுக்கல் குமரன் திருநகரை சேர்ந்தவர் சரவணன். இவரது தந்தை இரும்பு பட்டறை வைத்துள்ளார். இவர் பட்டறையில் இருப்பதால் இவருக்கு அடைமொழியாக பட்டறை சரவணன் என நண்பர்களால் அழைக்கப்பட்டு வந்தார். 

இவர் தற்போது திண்டுக்கல் திமுக மாநகர கிழக்கு பகுதி  மாணவரணி துணை அமைப்பாளராக இருந்து வருகிறார். இவர் மீது கொலை, ஆள் கடத்தல், அடிதடி என 10 க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது.

இந்நிலையில் நேற்று இரவு திண்டுக்கல் அண்ணாநகர் தைல தோப்பில் இருசக்கர வாகனத்தில் வந்துள்ளார். அப்பொழுது அங்கு காரில் வந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் பட்டறை சரவணனை கத்தி அரிவாள் போன்ற பயங்கர ஆயுதங்களால் கழுத்து, தலை, மற்றும் உடம்பில் பல இடங்களில் வெட்டியுள்ளனர். 

இதில் சம்பவ இடத்திலேயே சரவணன் இரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திண்டுக்கல் நகர் வடக்கு காவல் நிலைய போலீசார் சரவணனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இது தொடர்பாக திண்டுக்கல் நகர் வடக்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிக்க || கேரளாவில் பயங்கர தாக்குதல் நடத்த திட்டம்... ஈரோட்டில் ஐ எஸ் பயங்கரவாதி கைது!!