மாஜி அமைச்சரை துரத்தும் பிரச்சனை: குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யக்கோரி நடிகை மனு…  

முன்னாள் அமைச்சர் மீதான பாலியல் வழக்கில் உடனடியாக குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய வேண்டி பாதிக்கப்பட்ட நடிகை காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார்.

மாஜி அமைச்சரை துரத்தும் பிரச்சனை: குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யக்கோரி நடிகை மனு…   

அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் மணிகண்டன் திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ஏமாற்றி கருக்கலைப்பு செய்ததாக நடிகை அளித்த புகாரின் பேரில்  பாலியல் பலாத்காரம் உட்பட 6 பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்யப்பட்டு கடந்த ஜூன் மாதம் 20 ஆம் தேதி அடையாறு அனைத்து மகளிர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதனையடுத்து ஜாமீன் கேட்டு தொடர்ந்த மனுவில் காவல் நிலையத்தில் தினமும் கையெழுத்திட வேண்டுமெனவும், தேவைப்படும் போது விசாரணைக்கு ஆக வேண்டுமென என  நிபந்தனை ஜாமீனில் மணிகண்டனை வெளியே அனுப்பினர்.

இந்நிலையில் பாதிக்கப்பட்ட நடிகை காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு ஒன்றை அளித்துள்ளார். அந்த மனுவில் பாலியல் வழக்கான ராஜகோபாலன் வழக்கு,  சிவசங்கர் பாபா வழக்கு என அனைத்து வழக்கிற்கும் உடனடியாக காவல்துறை நீதிமன்றத்தில்  குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்துள்ளனர். ஆனால் எனது வழக்கில் அடுத்தகட்ட விசாரணைக்கு செல்லாமல் தேங்கி கிடப்பதாக நடிகை தெரிவித்துள்ளனர்.  இதனால் மணிகண்டன் மீதான பாலியல் வழக்கின் குற்றப்பத்திரிக்கையை உடனடியாக தாக்கல் செய்ய வேண்டுமென காவல் ஆணையரிடம் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

பாலியல் வழக்கில் 90 நாட்களுக்குள் காவல்துறையினர் விசாரணையை முடித்து நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய வேண்டும் ஆனால் வருகிற 18 ஆம் தேதியுடன் 90 நாட்கள்  நிறைவடைய இருப்பதால் நடிகை மனு அளித்திருப்பது குறிப்பிடத்தக்கது. இதே போல் தன்னை கட்டாயப்படுத்தி சட்டவிரோதமாக 3 முறை கருக்கலைப்பு செய்த மருத்துவர் அருண் மற்றும் மருத்துவர் மணிகண்டன் ஆகியோரின் மருத்துவர் அங்கீகாரம் ரத்து செய்ய வேண்டுமெனவும்,  தமிழ்நாடு மெடிக்கல் கவுன்சில் மற்றும் மாநில மெடிக்கல் கவுன்சிலுக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.