உ.பி-யில் வரதட்சணைக் கேட்டு கூட்டு பலாத்காரம் செய்ததோடு, முத்தலாக் கொடுத்த கணவன்!

உத்தரபிரதேச பெண் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு, வரதட்சணைக்காக முத்தலாக் கொடுத்திருக்கிறார்.

உ.பி-யில் வரதட்சணைக் கேட்டு கூட்டு பலாத்காரம் செய்ததோடு, முத்தலாக் கொடுத்த கணவன்!

வரதட்சணைக் கேட்டு, உத்திர பிரதேச மாநிலம் கோண்டா பகுதியில், ஒரு பெண்ணை, அவரது கணவர் மற்றும் அவரது உறவினர் இணைந்து கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படுகிறது. பின் 'முத்தலாக்' மூலம் பாதிக்கப்பட்டவரை விவாகரத்து செய்ததாக போலீஸார் தெரிவித்தனர்.

கடந்த வியாழக்கிழமை கைது செய்யப்பட்ட குற்றம் சாட்டப்பட்ட கணவர், லக்னோவைச் சேர்ந்த முகமது அத்னான்  என அடையாளம் காணப்பட்டார். மேலும் அவர் மற்றும் தலைமறைவாக உள்ள அவரது உறவினர் மீது எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

கணவர் வரதட்சணை கேட்டு அடிப்பதாக பாதிக்கப்பட்ட பெண் போலீசில் புகார் அளித்துள்ளார். கூறப்படும் வன்முறை காரணமாக, அந்த பெண் தனது தாய் வீட்டில் வசிக்கத் தொடங்கினார் என்று காவல்துறை கண்காணிப்பாளர் ஆகாஷ் தோமர் கூறியது குறிப்பிடத்தக்கது.

கடந்த செவ்வாய் (26 ஜூலை) அன்று, அத்னானும் அவரது உறவினரும் பாதிக்கப்பட்ட பெண்ணின் தாய் வீடு அதாவது, தனது மாமியார் வீட்டிற்குச் சென்று, இருவரும் அந்தப் பெண்ணை தனியாக இருப்பதைக் தெரிந்துக் கொண்டதால், அவளை பாலியல் பலாத்காரம் செய்தனர் என அதிகாரி தோமர் கூறினார்.

அத்னான் பின் அவளை அடித்ததோடு, 'முத்தலாக்' என்ற சட்டவிரோத நடைமுறையின் மூலம் விவாகரத்து செய்ததாக போலீசார் தெரிவித்தனர். மேலும், அத்னானை அடுத்து, தலைமறைவான அவரது உறவினரைப் பிடிக்கும் முயற்சி நடந்து வருகிறது என்று தெரிவித்தனர்.