குடிப்போதையில் நண்பனை அடித்துக்கொன்ற இளைஞர்கள்!! முன் விரோதம் காரணமா..? விசாரணையில் போலீசார்

குடிப்போதையில் நண்பனை அடித்துக்கொன்ற  இளைஞர்கள்!! முன் விரோதம் காரணமா..? விசாரணையில்  போலீசார்

அரக்கோணத்தில் குடிபோதையில் ஒருவரை அடித்துக் கொலை செய்த இரண்டு இளைஞர்களை போலீசார் கைது செய்தனர்.

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தை சேர்ந்த ஜாகீர் உசேன், சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், பழைய போலீஸ் லைன் தெருவில் உள்ள கழிவுநீர் கால்வாயில், ஜாகீர் உசேன் உயிரிழந்து கிடந்தார்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், உசேனின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில்,  நள்ளிரவில் ஜாகீர் உசேன் தனது நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்தியதாக கூறப்படுகிறது.

அப்போது ஏற்பட்ட தகராறில் நண்பர்கள் இருவரும் சேர்ந்து ஜாகீர் உசேனை அடித்து கொலை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து சாலி, கமலேஷ் ஆகிய இருவரை கைது செய்த போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர்.