மாணவிக்கு பாலியல் தொந்தரவு தந்த ஆசிரியர்: வேலூர் நடுவர்  நீதிமன்றத்தில் சரண்

ஆரணி அருகே தனியார் பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக முன்னாள் ஆசிரியர் மீது மாணவியின் தாயார் புகார் அளித்த நிலையில் அவர் வேலூர் மாவட்ட நடுவர்  நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

மாணவிக்கு பாலியல் தொந்தரவு தந்த ஆசிரியர்: வேலூர் நடுவர்  நீதிமன்றத்தில் சரண்

ஆரணி அருகே தனியார் பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக முன்னாள் ஆசிரியர் மீது மாணவியின் தாயார் புகார் அளித்த நிலையில் அவர் வேலூர் மாவட்ட நடுவர்  நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே லட்சுமி நகர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜா. இவர் 2016ம் ஆண்டு ஆரணியில் உள்ள ஓரு தனியார் பள்ளியில் ஆசிரியராக பணி புரிந்து வந்தார். அவர் பணியாற்றிய போது அதே தனியார் பள்ளியில், ஆரணி டவுன் பகுதியைச் சேர்ந்த மாணவி 8ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இதையடுத்து தனியார் பள்ளி ஆசிரியருக்கும் மாணவிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதன்பின்னர், ஆசிரியர் ராஜா குரூப்-4 தேர்வில் தேர்ச்சி பெற்று திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அரசுப் பணியில் சேர்ந்து 4 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். இருப்பினும் ஆரணியில் பள்ளி மாணவியிடையே நட்பு வளர்ந்துள்ளது. இந்நிலையில், கடந்த 16ஆம் தேதி ஆசிரியர் ராஜா, மாணவியுடன் தொடர்பில் இருப்பது மாணவியின் பெற்றோருக்கு தெரியவந்தது. இதை அறிந்த மாணவியின் பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர். இதையடுத்து தலைமறைவாக இருந்த ஆசிரியர் ராஜாவை போலீசார் தேடி வந்த நிலையில், அவர் வேலூர் மாவட்ட நடுவர்  நீதிமன்றத்தில் சரணடைந்தார். இந்த வழக்கை விசாரித்த நடுவர், ஆசிரியர் ராஜாவை நாளை திருவண்ணாமலை மாவட்ட நீதிமன்றத்தில்  ஆஜர் படுத்த உத்திரவிட்டார்.