பெருங்களத்தூரில் பரபரப்பு: பெண்ணுக்கு கத்திகுத்து மர்ம நபர் தப்பியோட்டம்!

பெருங்களத்தூரில் பரபரப்பு: பெண்ணுக்கு கத்திகுத்து மர்ம நபர் தப்பியோட்டம்!

பெருங்களத்தூர் ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த பெண் ஒருவரை, கத்தியால் குத்திவிட்டு தப்பியோடிய மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

சென்னை தாம்பரம் அடுத்த பெருங்களத்தூர் ரயில் நிலையத்தில் செங்கல்பட்டு செல்வதற்காக, தமிழ்ச்செல்வி என்ற பெண் நடைமேடையில் நின்று கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த மர்ம நபர் தமிழ்செல்வியை கத்தியால் குத்தி விட்டு தப்பி ஓடினார்.

இதையும் படிக்க : ”6 குடியரசு தலைவர்கள் மாணவர்களாக பயின்றது சென்னை பல்கலைகழகத்திற்கு பெருமை” திரெளபதி முர்மு

இதில் படுகாயம் அடைந்த தமிழ்ச்செல்வியை, ரயில்வே போலீசார் மீட்டு தாம்பரம் தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு பதிமூன்று தையல்கள் போடப்பட்டு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தப்பி ஓடிய மர்ம நபரை ரயில்வே போலீசார் மற்றும் காவல்துறை தேடி வருகின்றனர்.