விருந்தில் சிறுமிக்கு வலுக்கட்டாயமாக மது கொடுத்து...கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த அரசியல் பிரமுகர் மகன் கைது!!

பிறந்தநாள் விழாவிற்கு வந்த 14 வயது சிறுமியை மது கொடுத்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் அரசியல் பிரமுகரின் மகன் கைது செய்யப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விருந்தில் சிறுமிக்கு வலுக்கட்டாயமாக மது கொடுத்து...கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த அரசியல் பிரமுகர் மகன் கைது!!

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பஞ்சாயத்து உறுப்பினராக பணியாற்றும் சமர் கோலி, தனது மகனான சோஹல் பிறந்தநாளை கடந்த திங்கட்கிழமை அன்று சிறப்பாக கொண்டாடினார். இந்த பிறந்தநாள் விழாவிற்கு 9வது படிக்கும் சிறுமி ஒருவர் சென்றுள்ளார். இதனையடுத்து பிறந்தநாள் விழாவை முடித்து வீடுதிரும்பிய அந்த சிறுமி, மிக கடுமையாக உடல்நலம் பாதிக்கப்பட்டு சென்றுள்ளார். இதனால் உடனடியாக அந்த சிறுமி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

பின்னர் இந்த சம்பவம் குறித்து உயிரிழந்த சிறுமியின் தந்தை போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் தன் மகளை குடிக்க வற்புறுத்தியதாகவும், பின் அடையாளம் தெரியாத ஆண்களால் அவர் வீட்டின் முன் இறக்கிவிடப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

புகாரின் அடிப்படையில், விசாரணை நடத்திய போலீசார் அந்த சிறுமி தனியாக விருந்துக்கு சென்றாரா அல்லது சக நண்பர்கள் உடன் சென்றாரா என விசாரித்து வந்தனர். அப்போது திரிணாமுல் காங்கிரஸ் பஞ்சாயத்து உறுப்பினரின் மகன் சோஹல் தான் தன் நண்பர்களுடன் இணைந்து அந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக . அதன்படி சோஹலை கடந்த ஞாயிற்றுக்கிழமை போலீசார் கைது செய்தனர்.

இருப்பினும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் கிராம பஞ்சாயத்து உறுப்பினரின் மகனால் 14 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.