பணத்தை இரட்டிப்பு செய்து தருவதாக கூறி பல கோடி ரூபாய் மோசடி...! நகைக்கடை உரிமையாளருக்கு வலை வீச்சு!

சேலத்தில் பணத்தை இரட்டிப்பு செய்து தருவதாக கூறி பல கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்ட நகைக் கடை உரிமையாளரை காவல்துறையினா் தேடி வருகின்றனா்.

பணத்தை இரட்டிப்பு செய்து தருவதாக கூறி பல கோடி ரூபாய் மோசடி...!  நகைக்கடை உரிமையாளருக்கு வலை வீச்சு!

சேலம் ராஜ கணபதி கோயில் அருகே  லலிதாம்பிகை ஜுவல்லர்ஸ் என்னும் நகைகடை  இயங்கி வருகிறது. இந்த கடை உரிமையாளா் தங்கராஜ் என்பவா், நகை மற்றும் பணத்தை இரட்டிப்பு செய்து தருவதாக விளம்பரம் செய்துள்ளார்.

இதனை நம்பி அப்பகுதி பொது மக்கள் தங்களுடைய பணத்தை மற்றும் நகைகளை டெபாசிட் செய்துள்ளனா். இந்நிலையில், கடை உரிமையாளா் நகை மற்றும் பணத்தை சுருட்டி  கொண்டு தலைமறைவாகிவிட்டார்.  

இதையடுத்து பாதிக்கப்பட்ட பொதுமக்கள்  மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் புகார் அளித்திருந்தனர். புகார் அடிப்படையில், கடை உரிமையாளரை காவல்துறையினா் தேடி வருகின்றனா்.