நகை வாங்குவது போல் நடித்து, ஒன்றரை பவுன் தங்கசங்கலியை திருடி செல்லும் கும்பல்...சிசிடிவி வைரல்

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த புஞ்சை புளியம்பட்டியில் நகை வாங்குவது போல், கடைக்கு வந்த 3 பெண்கள் ஒன்றரை பவுன் தங்க சங்கிலியை திருடிச் செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

நகை வாங்குவது போல் நடித்து, ஒன்றரை பவுன் தங்கசங்கலியை திருடி செல்லும் கும்பல்...சிசிடிவி வைரல்

ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டி பேருந்து நிலையம் அருகே தர்மலிங்கம் என்பவர் குமரன் ஜுவல்லரி என்ற நகை கடை நடத்தி வருகிறார். இவரது நகைக்கடைக்கு கடந்த 21-ம் தேதி நகை வாங்குவது போல், வந்த மூன்று பெண்கள் நகை கடையில் பணிபுரியும் பெண்ணை திசைதிருப்பி கடையில் உள்ள ஒன்றரை பவுன் தங்க சங்கிலியை திருடிச் சென்றனர்.

இதுகுறித்து தர்மலிங்கம் புஞ்சைபுளியம்பட்டி காவல் நிலையத்தில் விசாரணை அளித்துள்ள நிலையில் தற்போது அந்த மூன்று பெண்கள் நகை திருடும் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.