இளைஞரை மிரட்டி செயின் பறித்த சம்பவம்...! சிசிடிவியில் சிக்கிய இருவர்...!

இளைஞரை மிரட்டி செயின் பறித்த சம்பவம்...! சிசிடிவியில் சிக்கிய இருவர்...!

சென்னை ஓட்டேரி சந்தியப்பன் இரண்டாவது தெருவில் வசித்து வருபவர் பவன் குமார் செளபால்(26). இவர் கடந்த 25 ஆம் தேதி அன்று மாலை ஓட்டேரி குன்னூர் ஹை ரோடு, பொடிக்கடை பேருந்து நிலையம் அருகே நடந்து சென்று கொண்டிருந்தபோது அவ்வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்த இரண்டு நபர்கள் பவன் குமார் கழுத்தில் அணிந்து இருந்த மூன்று கிராம் எடை கொண்ட தங்க டாலருடன் கூடிய செயினை பறித்து சென்றனர். 

இதுகுறித்து பவன் குமார் தலைமைச் செயலக காலனி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த தலைமைச் செயலக காலனி காவல் நிலைய குற்றப்பிரிவு போலீசார், அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். சிசிடிவி கேமரா காட்சிகளின் அடிப்படையில் ஓட்டேரி நாராயண மேஸ்திரி தெரு பகுதியை சேர்ந்த சஞ்சய்(20) மற்றும் அதே பகுதியை சேர்ந்த 15 வயது சிறுவன் என இரண்டு பேரையும் நேற்று கைது செய்தனர். அவர்களிடமிருந்து திருடப்பட்ட 3 கிராம் எடை கொண்ட செயின் மற்றும் இருசக்கர வாகனம் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட சஞ்சய் மீது வழக்கு பதிவு செய்த தலைமைச் செயலக காலணி போலீசார் அவரை  நீதிமன்றத்தில் அஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும், சிறுவனை சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பி வைத்தனர்.

இதையும் படிக்க :  மதுபானங்கள் கொள்முதல் விவரங்கள்...!  டாஸ்மாக் நிர்வாகம் பதிலளிக்க உத்தரவு...!