சொத்துக்காக பெற்ற தாயை கொலை செய்த மகள்....விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்....!

கர்நாடகாவில் சொத்திற்காக தாயின் காதலனை உசுப்பேற்றி, மகளே தாயை கொலை செய்ய திட்டமிட்டது விசாரணையில் அம்பலமாகியுள்ளது.

சொத்துக்காக பெற்ற தாயை கொலை செய்த மகள்....விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்....!

கர்நாடகா மாநிலம் ஆனேக்கல் அடுத்த ஜிகினி பகுதியை சேர்ந்தவர் அர்ச்சனா. இவர் கடந்த 29ஆம் தேதி மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர்.

விசாரணையில் அர்ச்சனா முதல் கணவரை விவாகரத்து செய்து விட்டு, இரண்டாவதாக ஒருவரை திருமணம் செய்ததும், அவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், 3-வதாக நவீன் என்பவரை காதலித்து வந்ததும் தெரியவந்தது.

அந்த நவீன் அர்ச்சனாவை மட்டுமன்றி அவரது முதல் கணவருக்கு பிறந்த யுவனிகா என்பவரையும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.  இந்நிலையில் அர்ச்சனாவுக்கு 4வதாக ஒரு நபருடன் தொடர்பு ஏற்பட்டதாகவும், நெருக்கம் அதிகமானதால், சொத்து அவருக்கு சென்றுவிடுமோ என எண்ணிய யுவனிகா, காதலன் நவீனை உசுப்பேற்றி அவரது தாயையே கொலை செய்ய திட்டமிட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது.