சப்பாத்தியை தர மறுத்ததால், கொலை செய்த கொடூர சம்பவம்!

டெல்லி ரிக்‌ஷாக்காரர், குப்பை எடுப்பவருடன் சப்பாத்தியை பகிர்ந்து கொள்ள மறுத்ததால் கொலை செய்திருக்கிறார். இதனால் பெரும் பதற்றம் உருவாகியுள்ளது.

சப்பாத்தியை தர மறுத்ததால், கொலை செய்த கொடூர சம்பவம்!

டெல்லியில் 40 வயது ரிக்ஷாக்காரர் ஒருவர் சப்பாத்தியை பகிர்ந்து கொள்ள மறுத்ததால் குடிபோதையில் இருந்த குப்பை பொறுக்கும் தொழிலாளி கொலை செய்தார்.

இறந்த நபர், முன்னா என அடையாளம் காணப்பட்டுள்ளார். சம்பவத்தை நேரில் பார்த்த சாட்சியின் கூற்றுப்படி, தஙா சோக் என்ற பகுதியிக்கு அருகில், குடி போதையில் குற்றம் சாட்டப்பட்டவர் வந்திருக்கிறார். அப்போது சப்பாத்தி சாப்பிட்டுக் கொண்டிருந்த முன்னாவிடம், அவரது உணவைப் பகிர்ந்துக் கொள்ளும் படி கேட்டதற்கு, முன்னா மறுப்பு தெரிவித்திருக்கிறார். கோவத்தில், தன்னிடம் இருந்த ஒரு கத்தியை எடுத்து முன்னாவை சரமாறியாகக் குத்தியிருக்கிறார்.

பின், சாட்சி, கொலையாளியைத் துறத்த முயன்ற போது, அவர் தப்பித்து விட்டார். பின், அவரிடம், கொலையாளியின் அங்க அடையாளங்களைப் பெற்று, வெறும் ஆறு மணி நேரத்திலேயே, குற்றம் சாட்டப்பட்டவரைப் பிடித்ததாக, மத்திய காவல் துறையின் துணை ஆனையர் ஷ்வேதா சோஹான் தெரிவித்தார். இந்த சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.