டெல்லியில் தங்கையின் கள்ளக் காதலனை கொன்ற சகோதரன்..!

சரமாரியாக தாக்கியும், கத்தியால் குத்தியும் கொடூர கொலை..!

டெல்லியில் தங்கையின் கள்ளக் காதலனை கொன்ற சகோதரன்..!

டெல்லியில் திருமணமான தங்கையின் கள்ள காதலனை கொடூரமாக அடித்து, பலமுறை கத்தியால் குத்தி கொன்ற சகோதரனின் செயல் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. சீமாபூரியில் 24 வயதான ஷாருக் என்பவரை, 3 பேர் கொண்ட கும்பல் கொடூரமாக தாக்கி, பலமுறை கத்தியால் குத்தி கொன்றுள்ளனர். இது தொடர்பான வீடியோ வைரலான நிலையில், ஆதித்யா மற்றும் ஜூபார் ஆகிய இருவரை டெல்லி போலீசார் கைது செய்தனர். அதில் ஒருவரின் தங்கை, கொலை செய்யப்பட்ட இளைஞருடன் தகாத உறவு வைத்திருந்ததாகவும், இதனால் ஆத்திரமடைந்த பெண்ணின் சகோதரர் தமது நண்பர்களுடன் சேர்ந்து இளைஞரை கொலை செய்ததாகவும் தெரிகிறது.