மகிழ்ச்சியாக ஆரம்பித்த பொங்கல் விளையாட்டுப் போட்டி...இறுதியில் கொலையுடன் நிறைவடைந்த சோகம்!! மானாமதுரையில் பரபரப்பு

ஒலி பெருக்கி மூலம்  போட்டி அறிவிப்புகளை வெளியிட்டவரை அடித்துக்கொன்ற கொடூரம்...

மகிழ்ச்சியாக  ஆரம்பித்த பொங்கல் விளையாட்டுப் போட்டி...இறுதியில் கொலையுடன் நிறைவடைந்த சோகம்!! மானாமதுரையில் பரபரப்பு

திருப்புவனம் அருகே பொங்கல் விளையாட்டுப் போட்டி, கொலையில் முடிந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள இலந்தைகுளம் கிராமத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டுள்ளது. 

இதில், இலந்தை குளம் கிராமத்தை சேர்ந்த சிவானந்தம் என்பவர் ஒலி பெருக்கி மூலம்  போட்டிகள் தொடர்பான அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். இதற்கு, அதே கிராமத்தைச் சேர்ந்த, கார்த்திகேயன், கருப்புசாமி, அருண்குமார், ஆகியோர் அவரை மைக்கில் பேசக்கூடாது என்று பிரச்சனை செய்துள்ளனர். 

இது தொடர்பாக ஏற்பட்ட மோதலில், இரு தரப்பினரும் மோதிக் கொண்டனர். இதில், கருப்புசாமி என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அருண்குமார் பலத்த காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பின்னர், இது குறித்து தகவலறிந்த போலீசார் மோதலில் ஈடுபட்ட  5 பேரை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.