லோடு வாகனம் மோதியதில் சப் இன்ஸ்பெக்டர் படுகாயம் ..!

லோடு வாகனம் மோதியதில் சப் இன்ஸ்பெக்டர் படுகாயம் ..!

போரூரில் சப் இன்ஸ்பெக்டர் மீது லோடு வாகனம் மோதியதில் சப் இன்ஸ்பெக்டர் படுகாயம்  - ஓட்டுனர் கைது. 

சென்னை போரூர் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றி வருபவர் செந்தில்(58)இவர் இரவு பணியை முடித்துவிட்டு இன்று காலை தனது இருசக்கர வாகனத்தை எடுத்துக் கொண்டு போரூர் கிண்டி மவுண்ட் சாலை சரவணா ஸ்டோர் அருகே சென்று கொண்டிருந்தார்.

அப்போது  சாலையை  கடக்க முயன்ற அவர் மீது தண்ணீர் கேன்களை ஏற்றிக்கொண்டு வந்த லோடு வாகனம் சாலையை கடக்க முயன்ற  உதவி ஆய்வாளர் மீது மோதியதில் அவர் தூக்கி வீசப்பட்டு சாலையில் விழுந்தார். அதில் அவருக்கு கை கால்,  உள்ளிட்ட இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டது.

பின்னர் இதுக்குறித்து தகவல் அறிந்து வந்த பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு போலீசார் ஆய்வாளரை மீட்டு உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து தொடர்பாக வழக்குபதிவு  செய்து  லோடு வாகனத்தை ஓட்டி வந்த ராஜேந்திரன் என்பவரை கைது செய்து காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சாலையை கடக்க முயன்ற சிறப்பு உதவி ஆய்வாளர் மீது லோடு வாகனம் மோதி விபத்துக்குள்ளான  சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிக்க   | "அதானி மீது உள்ள குற்றச்சாட்டிற்கு அமைதி காக்கும் பிரதமரும் குற்றவாளி தான்" ஆ ராசா!