மாமனாருக்கு வச்சது!!! கூட இன்னொன்னும் போச்சு!!! - மருமகன் கைது!!!

மாமனாருக்கு மதுவில் விஷம் வைத்து கொலை செய்யும் முயற்ச்சியில், அந்த மாமனாரின் நண்பரும் சிக்கி இருவர் உயிரிழந்ததால், பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மாமனாருக்கு வச்சது!!!  கூட இன்னொன்னும் போச்சு!!! - மருமகன் கைது!!!

கோவை : மாவட்டம் சூலூர் அருகே உள்ள பொன்னாகணி பகுதியை சேர்ந்த உரை விவசாயி வேலுச்சாமி. இவரது உறவினரான மனோகரனுடன் கடந்த செப்டம்பர் 5ம் தேதி, ஞாயிற்றுக்கிழமை, தோட்டத்தில் மது குடித்திருக்கிறார். இருவரும் மது குடித்த ஐந்து நிமிடத்திலேயே சுருண்டு விழுந்துள்ளனர். இதனைப் பார்த்த அருகில் இருந்தவர்கள் உடனடியாக சூலூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அவர்களை எடுத்துச் சென்றுள்ளனர்.

மருத்துவமனைக்கு வருவதற்கு முன்பே, அவர்கள் இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்த நிலையில், சம்பவம் தொடர்பாக சூலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அதில் பல திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்துள்ளது.

மேலும் படிக்க | போலிசின் கண்ணத்தைக் கடித்த ஆசாமி கைது!!!

மனோகரனின் மருமகன் சத்யராஜ், தனது மாமனாருக்கு, ‘இண்டியா மார்ட்’ என்ற பிரபல ஆன்லைன் நிறுவனத்தில் 2 கிராம் உயிரைக் கொல்லும் சயனைடு விஷத்தை, 10 நாட்களுக்கு முன்பே 7 ஆயிரம் ரூபாய் கொடுத்து வாங்கி கலந்து கொடுத்தது தெரிய வந்தது. இச்சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க | சமூக ஊடகங்களை கண்காணிக்க 203 பேர் கொண்ட காவலர் குழு..! வச்சாருப்பா ஆப்பு நம்ம டிஜிபி சைலேந்திர பாபு!

கல்யாணத்திற்கு முன் பல்லடம் பொங்கலூர் பகுதியில் ஒரு இளம்பெண்ணிற்கு தாலியை வீசி கட்ட முயன்று பொதுமக்களிடம் நல்ல கவனிப்பைப் பெற்றுள்ளார். பின், பணத்தாசையில் மாமனார் தோட்டம் விற்ற பணத்தை செலவு செய்து விட்டால் தனக்கு ஒன்றும் கிடைக்காது என்ற பேராசையால் இந்த விபரீத கொலையைச் செய்துள்ளார். இதில் அப்பாவி விவசாயி வேலுசாமி சிக்கி உயிருழக்காவிட்டால் மனோகரன் இறப்பில் சந்தேகம் ஏற்பட வாய்ப்பில்லாமல் போயிருக்கும்.

மேலும் படிக்க | குட்டியானையில் கடத்தப்பட்ட குட்கா பொருட்கள் பறிமுதல்!!!

மாமனாருக்கு கொடுக்க வாங்கிய மதுபாட்டிலை தனது செல்போனில் படம் எடுத்து வைத்திருந்துள்ளார் சத்யராஜ். இதனை வைத்து தான் போலீசார் சத்யராஜ்-ஐ பிடித்துள்ளனர். பின், சூலூர் போலீசார், மனோவின் மருமகன் சத்யராஜை கைது செய்து சம்பவம் நடந்த பகுதியான நெகமம் காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர்.

மேலும் படிக்க | மது போதையில் கோவில் பூசாரியின் கையை உடைத்த நபர் கைது!!!

சம்பவம் தொடர்பான நெகமம் போலீசார் விசாரணை நடத்தி, குற்றவாளி நீதிமன்றத்தில் ஆச்சார்படுத்தி சிறையில் அடைக்க உள்ளனர்.  மாமனாருக்கு சொத்துக்காக மருமகனே சயனைடு கலந்த மதுபானத்தை கொடுத்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

குறித்த பகுதி மக்கள் தெரிவிக்கும்போது மினார் சமீபத்தில் தோட்டத்தை விற்பனை செய்து உள்ளதாகவும் அதில் வந்த பணத்தை ஊதாரியாக செலவு செய்து வருவதாகவும் அதனை சத்யராஜ் அபகரித்துக் கொள்வதற்காக மதுபானத்தில் சயனைடு கலக்கி கொன்று விட்டதாகவும் கூறப்படுகிறது. ஆனால், எதிர்பாராத விதமாக மனோவின் உறவினரான வேலுச்சாமியும் குடித்து இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க | சரக்கடித்துவிட்டு சாலையில் சடுகுடு : நடுரோட்டில் முதியவரின் அட்டகாசம் !!

போலீசார் சரியான நேரத்தில் குற்றவாளியையும், குற்றம் நடந்த தன்மையையும் கண்டுபிடிக்காமல் இருந்திருந்தால் அருகிலிருக்கும் மது கடைகள் பெரும் விளைவைச் சந்தித்திருக்கும் என பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் தெரிவித்தனர்.