அப்பாவி பெண்களை ஏமாற்றும் சிங்கப்பூர் காவலர்.. நடவடிக்கை எடுக்க கோரி பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர் புகார்!!

அப்பாவி பெண்களை ஏமாற்றும் சிங்கப்பூர் காவலர் மீது நடவடிக்கை எடுக்க கோரி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர் புகார் அளித்துள்ளனர்.

அப்பாவி பெண்களை ஏமாற்றும் சிங்கப்பூர் காவலர்.. நடவடிக்கை எடுக்க கோரி பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர் புகார்!!

தூத்துக்குடி பெண்ணை திருமணம் செய்து நகை, பணத்தை அபகரித்து மோசடி செய்ததாக சிங்கப்பூர் காவலர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தூத்துக்குடி திரேஸ்புரம் மஸ்ஜீதே முகத்தஸ் ஜமாத் கமிட்டியினர் தலைமையில் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்தனர்.

பின்னர் இதுகுறித்து பேசிய பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை சம்சுதீன், தனது மகள் அமீர்நிஷாவை, சிங்கப்பூரில் போலீஸ் அதிகாரியாக பணிபுரியும் முகமது ரபீக் என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்தாகவும், ஆனால்  ஒரு மாதத்திற்குள் மகளை  கொடுமைபடுத்தி தலாக் செய்து விட்டதாகவும் குற்றம்சாட்டினார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பாதிக்கப்பட்டவர் கோரிக்கை விடுத்தார்.