மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சிவசங்கர் பாபா காசியாபாத்தில் கைது: இன்று மாலை சென்னை அழைத்து வர சிபிசிஐடி திட்டம்...

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் தேடப்பட்டு வந்த சிவசங்கர் பாபா காசியாபாத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சிவசங்கர் பாபா காசியாபாத்தில் கைது: இன்று மாலை சென்னை அழைத்து வர சிபிசிஐடி திட்டம்...

சென்னை அடுத்த கேளம்பாக்கத்தில் உள்ள சுசில் ஹரி பள்ளி மாணவிகளுக்கு, அப்பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபா பாலியல் தொல்லை கொடுத்ததாக சமூக வலைதளங்களில் புகார் எழுந்தது. இதையடுத்து அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, இந்த வழக்கு  சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றப்பட்டது.

இதற்கிடையில் சிவசங்கர் பாபா தலைமறைவானதை அடுத்து, அவர் உத்தரகாண்ட் மாநிலம், டேராடூனில் இருப்பதாக கூறப்பட்டது. இதனையடுத்து 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, ஒரு குழு சிவசங்கர் பாபாவிடம் விசாரணை மேற்கொள்வதற்காக டேராடூன் விரைந்தது.

இந்தநிலையில்  மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சிவசங்கர் பாபா, வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்லாமல் இருக்க அனைத்து விமான நிலையங்களுக்கும் சி.பி.சி.ஐ.டி. லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பி இருந்தது. இதற்கிடையே, டேராடூனில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த சிவசங்கர் தப்பியோடிய நிலையில் உத்திர பிரதேச மாநிலம் காசியாபாத்தில் வைத்து சி.பி.சி.ஐ.டி காவல்துரையினர் கைது செய்துள்ளனர். இதனையடுத்து  சிவசங்கர் பாபாவை இன்று மாலை சென்னைக்கு அழைத்து வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.