துபாயிலிருந்து தங்கம் கடத்தல்... ரூ.77 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல்...

துபாயில் இருந்து திருச்சி வந்த பயணிகள் இரண்டு பேரிடம் இருந்து ரூ.77 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல்

துபாயிலிருந்து தங்கம் கடத்தல்... ரூ.77 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல்...

துபாயில் இருந்து திருச்சி வந்த பயணிகள் இரண்டு பேரிடம் இருந்து 77 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்கத்தை கைப்பற்றிய அதிகாரிகள், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சார்ஜாவில் இருந்து திருச்சி விமான நிலையத்திற்கு வந்து சேர்ந்த ஏர் இந்தியா விமானத்தின் பயணிகளை வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர்.  அதில் இரண்டு பயணிகள்  தங்கம் கடத்த முயன்றது கண்டுபிடிக்கப்பட்டது. ஒரு பயணியை சோதனை செய்ததில் ஆசனவாயில் பேஸ்ட் வடிவில் மறைத்து கொண்டு வரப்பட்ட 42 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான 870 கிராம் தங்கத்தை அதிகாரிகள் கைப்பற்றினர்.

இதேபோல், மற்றொரு நபர் எலக்ட்ரானிக் தராசில் மறைத்துக் கொண்டு வரப்பட்ட 34 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இரண்டு பயணிகளிடமிருந்து சுமார் 77 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்கம் கைப்பற்றப்பட்டதாக தெரிவித்த அதிகாரிகள் இதுகுறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருவதாகவும் குறிப்பிட்டனர்.