ரூ. 2 கோடி மதிப்பிலான செம்மரக்கட்டைகள் பறிமுதல்... வனத்துறை அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை...

குன்றத்தூர் அருகே குடோனில் பதுக்கி வைத்திருந்த 2 கோடி ரூபாய் மதிப்பிலான செம்மரக்கட்டைகளை வனத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

ரூ. 2 கோடி மதிப்பிலான செம்மரக்கட்டைகள் பறிமுதல்... வனத்துறை அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை...

சென்னை குன்றத்தூர் அடுத்த நந்தம்பாக்கம் பகுதியில் உள்ள ஒரு கிடங்கில் செம்மரக்கட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற வனத்துறை அதிகாரிகள் கிடங்கில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, 2 கோடி ரூபாய் மதிப்புடைய  2 டன் செம்மரக்கட்டைகள் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது கிடங்கு  அதே பகுதியை சேர்ந்த ராஜா என்பவருக்கு சொந்தமானது என தெரியவந்தது. மேலும் குடோனை மதுரவாயல் பகுதியை சேர்ந்த அமீர் என்பவர் வாடகைக்கு எடுத்து ஷோபா உள்ளிட்ட பொருட்களை வியாபாரம் செய்து வந்ததும் தெரியவந்துள்ளது. தொடர்ந்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.