சிற்றுண்டி நடத்தி வந்தவரை மிரட்டிய ’2k’ ரவுடி: இப்படி செய்த போலீஸ்!

சாலையோரத்தில் சிற்றுண்டி கடை நடத்திவரும் உரிமையாளரை  பணம் கேட்டு தகராறு செய்த ரவுடியை போலீசார் கைது செய்துள்ளனர்.

சிற்றுண்டி நடத்தி வந்தவரை மிரட்டிய ’2k’ ரவுடி:  இப்படி செய்த போலீஸ்!

சாலையோரத்தில் சிற்றுண்டி கடை நடத்திவரும் உரிமையாளரை  பணம் கேட்டு தகராறு செய்த ரவுடியை போலீசார் கைது செய்துள்ளனர்.

சென்னை வில்லிவாக்கம் சிட்கோ நகர் பகுதியை சேர்ந்த அருண்குமார் (30) அதே பகுதியில் சாலையோரத்தில் டிபன் கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில் நேற்று வாலிபர் ஒருவர் சாலையோரத்தில் கடை வைத்ததற்காக தனக்கு பணம் தரவேண்டும் என அருண்குமாரை மிரட்டியுள்ளார்.

இதுதொடர்பாக வில்லிவாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தன் மூலம் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் தகராறில் ஈடுபட்ட வாலிபரை பிடித்து வில்லிவாக்கம் காவல் நிலையத்தில் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினார்கள்.  அப்போது அவர் சிட்கோ நகர் பகுதியை சேர்ந்த ரவுடி கார்த்தி என்கிற மாவு கார்த்தி 22 என தெரியவந்தது.

மேலும் கடந்த வருடம் நடைபெற்ற கொலை வழக்கு இவர் மீது உள்ளது தெரிய வந்தது. அதன்பிறகு மேலும் அவர் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.