தொழிலதிபர் வீட்டில் கொள்ளை சம்பவம்...! இருவர் கைது...!

தொழிலதிபர் வீட்டில் கொள்ளை சம்பவம்...! இருவர் கைது...!

கன்னியாகுமரி மாவட்டத்தில் சமீப காலமாக தொடர் வழிப்பறி கொள்ளை சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. மேலும் போலீசாரின் தீவிர நடவடிக்கையால் கொள்ளையர்களையும், திருடர்களையும் பிடித்து வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த வாரம் நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே அப்சர்வேட் தெருவைச் சேர்ந்தவர் யூஜின்தாஸ். தொழில் அதிபரான இவர் வெளிநாட்டில் தொழில் செய்து வருகிறார். இவர் குடும்பத்தோடு வீட்டை பூட்டி விட்டு சென்னை சென்றிருந்தார். இந்நிலையில் யூஜின்தாஸின் வீட்டில் பின்புற கதவு  உடைக்கப்பட்டு திறந்து கிடப்பதாக அக்கம் பக்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

அதனை தொடர்ந்து நேசமணி நகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார் யூஜின்தாஸ். அதன் பேரில் போலீசார் விரைந்து வந்து பார்த்தபோது இரவோடு இரவாக வீட்டின் பின்பக்க கதவை உடைத்து மர்மநபர்கள் உள்ளே புகுந்து பீரோவில் இருந்த 21 பவுன் நகையை திருடி சென்றது தெரியவந்துள்ளது. இந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் கொள்ளையர்களை தேடி வந்தனர். 

இந்நிலையில் சந்தேகத்தின் பேரில் சுசீந்திரம் பகுதியை சேர்ந்த சுப்பிரமணியன், கிருஷ்ணன் கோவில் இரும்பு தட்டான்விளை பகுதியை சேர்ந்த ரதீஷ் ஆகியோரை தனிப்படை போலீசார்  கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். அதில் தொழிலதிபர் வீட்டின் பின் பக்க கதவை உடைத்து 21 பவுன் நகையை கொள்ளையடித்தது தெரியவந்தது. மேலும் இவர்கள் மீது பல்வேறு காவல் நிலையங்களில் திருட்டு வழக்கு நிலுவையில் உள்ளதும், பிரபல கொள்ளையர்கள் என்பதும் தெரியவந்தது. அதனை தொடர்ந்து போலீசார் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.


இதையும் படிக்க : 12 ஆம் வகுப்பு மாணவி மீது ஆசிட் வீச்சு...! வெளியான சிசிடிவி காட்சி...!