பைக் மீது லாரி மோதியதில் பெண் பரிதாபமாக உயிரிழப்பு...
புளியந்தோப்பில் வட மாநில லாரி மோதி 36 வயது பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை | வியாசர்பாடி பாலகிருஷ்ணன் தெரு பகுதியைச் சேர்ந்தவர் வேணுகோபால். 49 வயதான இவரது மனைவி நிர்மலா 39 இவர்கள் வியாசர்பாடி பகுதியில் மளிகை கடை வைத்து நடத்தி வருகின்றனர்.
இவர்களுக்கு ஒரு பெண் ஒரு ஆண் என இரண்டு பிள்ளைகள் உள்ளனர். இன்று காலை 8 மணியளவில் நிர்மலா கோயம்பேடுக்கு சென்று காய்கறிகளை வாங்குவதற்காக டிவிஎஸ் எக்சல் வண்டியில் ரமேஷ் என்பவருடன் புளியந்தோப்பு அம்பேத்கர் கல்லூரி சாலை வழியாக சென்று கொண்டிருந்தார்.
அப்பொழுது உத்திர பிரதேசத்தில் இருந்து ஆடு தொட்டிக்கு வந்த லாரி இருசக்கர வாகனத்தின் மீது மோதியதால் இருசக்கர வாகனம் நிலை தடுமாறி கீழே விழுந்தது.இதில் லாரியின் பின் சக்கரம் ஏறி சம்பவ இடத்திலேயே நிர்மலா தலை நசுங்கி உயிரிழந்தார்.
மேலும் படிக்க | மேலும் ஒரு போக்சோ... வாலிபருக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனை...
உடனடியாக கீழ்பாக்கம் போக்குவரத்து புலனாய்வு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து நிர்மலாவின் உடலை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் மேலும் வாகனத்தை ஓட்டி வந்த உத்திரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த லாரியின் டிரைவர் மற்றும் கிளீனர் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.
தொடர்ந்து போலீசார் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் லாரி மோதி சம்பவ இடத்திலேயே பெண் பலியான ஆத்திரத்தில் அங்கிருந்த பொதுமக்கள் லாரி டிரைவரை சரமாரியாக தாக்கினார் இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
மேலும் படிக்க | கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர் கைது...