பாலியல் வன்புணர்வு செய்த பூசாரி கைது!

வயிற்று வலிக்கு வைத்தியத்திற்காக வந்த சிறுமையை பாலியல் வன்புணர்வு செய்த பூசாரி கைது செய்யப்பட்டுள்லார். இச்சம்வவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாலியல் வன்புணர்வு செய்த பூசாரி கைது!

பெண்களுக்கு எங்கு சென்றாலும் பாதுகாப்பு இல்லை. கோவில் பூசாரியில் இருந்து பக்கத்து வீட்டுக்காரன் வரை அனைவரும் வன்மத்தை மனதில் வைத்து பழகுகின்றனர் எனத் தோன்றும் அளவில் இருக்கிறது இன்றைய சமூகம். இதில், பெண்கள் மட்டுமல்ல, இதெல்லாம் என்னவென்றே தெரியாத சிறுமிகள் உட்பட அனைவருமே பாதிக்கப்படுகிறனர். அதில் ஒரு மோசமான வழக்கு தான் இது.

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் பகுதியை சேர்ந்த பத்தாம் வகுப்பு முடித்துள்ள 15 வயது சிறுமிக்கு, கடந்த 5 மாதங்களுக்கு முன்பு வயிற்று வலி பிரச்சனை இருந்துள்ளது. இதனை அறிந்த அதே பகுதியில் உள்ள ஒரு கோயிலில் பூசாரியாக இருக்கும் பழனி என்ற 65 வயது முதியவர் சிறுமியின் தாயாரை அணுகி, தான் சிறப்பு பூஜை மூலம் அந்த சிறுமியின் வயிற்றில் வலியை குணப்படுத்துவதாக கூறியுள்ளார்.

இதனை நம்பிய சிறுமியின் தாயும் அந்த சிறுமியை பூசாரி பழனியின் வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார். அப்போது சிறுமியின் தாயாரை வீட்டின் வெளியே அமர வைத்த பூசாரி பழனி, வீட்டிற்குள் தான் குறி பார்க்கும் அறையில் சிறுமியின் வயிற்று வலியை போக்க சிறப்பு பூஜைகள் செய்வதாக கூறியுள்ளார்..

ஆனால் சம்பவத்தன்று அந்த சிறுமியை பூசாரி பழனி பாலியல் வன்புணர்வு செய்துள்ளார். இதில் சிறுமி 3 மாதம் கர்ப்பம் ஆன நிலையில் அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாயார் இது குறித்து கீரனூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கடந்த ஜூன் மாதம் 9 ஆம் தேதி புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் கீரனூர் அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார் போக்சோ உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கோயில் பூசாரி பழனியை ஜூன் 10 ஆம் தேதி கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

தற்போது புதுக்கோட்டை சிறையில் பூசாரி பழனி அடைக்கப்பட்டிருந்த நிலையில் அவரை குண்டர் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைக்க புதுக்கோட்டை எஸ்பி வந்திதாபண்டேயின் பரிந்துரையின் அடிப்படையில் மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு உத்தரவிட்டார். இதனையடுத்து பூசாரி பழனி குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு புதுக்கோட்டை சிறையில் இருந்து திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

15 வயதே ஆன சிறுமியை, 65 வயது முதியவர், பாலியல் வன்புணர்வு செய்து மூன்று மாத கர்ப்பிணியாக்கிய நிலையில், அவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்து இருப்பது பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் எதிராக பாலியல் குற்றங்களை ஈடுபடும் நபர்களுக்கு ஒரு எச்சரிக்கையாக அமைந்துள்ளது என அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். மேலும், யாருக்கும் தெரியாமல் இருந்த இந்த சம்பவம் சிறுமி கர்ப்பம் அடைந்ததால் மட்டுமே தெரியவந்த்ததால், அப்பகுதி மக்களுக்கு இது பெரும் அதிர்ச்சியாக அமைந்துள்ளது.