சிகிச்சைக்கு வரும் பெண்களிடம் ஆபாச பேச்சு : ஆரம்ப சுகாதாரமைய டாக்டர் மீது புகார்!!

சென்னை வில்லிவாக்கம் அருகேயுள்ள ஆரம்ப சுகாதார மையத்திற்கு வரும் பெண்களை ஆபாச வார்த்தைகளால் கேள்விகள் கேட்கும் மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார்கள் எழுந்துள்ளது.

சிகிச்சைக்கு வரும் பெண்களிடம் ஆபாச பேச்சு : ஆரம்ப சுகாதாரமைய டாக்டர் மீது புகார்!!

வில்லிவாக்கம் அகத்தியர் நகர் வேணுகோபால் தெருவில் சென்னை ஆரம்ப சுகாதாரம் மையம் செயல்பட்டு வருகிறது. இந்த ஆரம்ப சுகாதார மையத்தில் டாக்டர் சந்திரசேகர் என்பவர் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வருகிறார்.

இந்நிலையில் அங்கு சிகிச்சை மேற்கொள்ள வரும் பெண்களிடம் ஆபாச வார்த்தைகள் பேசி அவர்களை பாலியல் வன்முறைக்கு தூண்டுவதாக கூறப்படுகிறது. இந்த டாக்டர் ஏற்கனவே ராஜமங்கலம் பகுதியில் இது போன்ற செயல்களில் ஈடுபட்டதால் அங்கிருந்து அவர் மாற்றலாகி இங்கு வந்ததாக கூறுகின்றனர்.

மேலும் தகாத வார்த்தையினால் ஆபாசமாக பேசுவதைக் கேட்ட பெண்கள் மிகவும் கூச்சத்தோடு தனது கணவரிடம் இது பற்றி கூறினர். இதுபற்றி மேல்அதிகாரிகள் இவர்  மீது நடவடிக்கை எடுப்பார்களா என்பது பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.