குடிபோதையில் இளைஞர்கள் செய்த அட்டூழியம்: இருவர் கைது

சென்னையில் குடிபோதையில் கத்தியை காட்டி மிரட்டி வாகனத்தை சேதப்படுத்திய இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

குடிபோதையில் இளைஞர்கள் செய்த அட்டூழியம்: இருவர் கைது

சென்னையில் குடிபோதையில் கத்தியை காட்டி மிரட்டி வாகனத்தை சேதப்படுத்திய இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

சென்னை திருவிக நகர்  மெயின் ரோடு பகுதியில் அமைந்துள்ள பெண்கள் உடற்பயிற்சி கூடம் அருகே கடந்த 12 ஆம் தேதி இரவு இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் அந்த பகுதியிலிருந்த இளைஞர்களை கத்தியை காட்டி மிரட்டியும், அங்கிருந்த வாகனத்தையும் சேதப்படுத்துவது போல் சிசிடிவி காட்சிகள் வெளியாகி வைரலானது. இது தொடர்பாக அப்பகுதியை சேர்ந்த எழிலரசி திருவிக நகர் போலீசாரிடம் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் இந்த சிசிடிவி காட்சிகளை வைத்து திருவிக நகர் போலீசார்  விசாரணை நடத்தியதில் பெரவள்ளூரை சேர்ந்த இமான்(எ) ஜெயகுமார்(25) மற்றும் சௌந்தர்( எ) குள்ளாபாய்(21) என்பது தெரியவந்தது. இதனையடுத்து இவர்களை பிடித்து விசாரிக்கும் போது குடி போதையில் நடந்து கொண்டதாக ஒப்புகொண்டனர்.

இதனையடுத்து இருவரையும் கைது செய்து அவர்கள் மீது 5பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்தனர்.ஏற்கெனவே இமான் மீது பல வழக்குகள் நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.