தூத்துக்குடி: குத்துவிளக்கால் தாக்கி கணவரை கொலை செய்த மனைவி கைது!!

தூத்துக்குடி மாவட்டம் சாயர்புரம் அருகே குத்துவிளக்கால் தாக்கி கணவரை கொலை செய்த மனைவியை போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி: குத்துவிளக்கால் தாக்கி கணவரை கொலை செய்த மனைவி கைது!!

சாயர்புரம் அருகே சிவத்தையாபுரம் கிராமத்தை சேர்ந்த கூலி தொழிலாளி பொன்ராஜ் - சந்திரமதி தம்பதியருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில் தம்பதியர் இருவருக்கும் குடும்ப பிரச்சனை இருந்து வந்ததாகவும், இருவரும் மனநிலை பாதிக்கப்பட்டது போல் செயல்பட்டதாகவும், சந்திரமதி கணவரை அடித்து துன்புறுத்தி வந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் சந்திரமதி தனது வீட்டு வாசலில் வைத்து கணவரை குத்துவிளக்கால் தாக்கினார். இதில் படுகாயமடைந்தவர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதைத்தொடர்ந்து சாயர்புரம் போலீசார் சந்திராவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.