வீட்டு தோட்டத்தில் பதுக்கிய விஷ சாராயம்... மரக்காணத்தில் அண்ணன்,  தம்பிக்கு போலீஸ் வலைவீச்சு...

மரக்காணம் அருகே வீட்டு தோட்டத்தில் பதுக்கி வைத்திருந்த விஷ சாராயத்தை பறிமுதல் செய்த போலீசார், அண்ணன் தம்பியை வலைவீசி தேடி வருகின்றனர்.

வீட்டு தோட்டத்தில் பதுக்கிய விஷ சாராயம்... மரக்காணத்தில் அண்ணன்,  தம்பிக்கு போலீஸ் வலைவீச்சு...

கோட்டக்குப்பம் உட்கோட்டத்தில் கள்ளச்சாராயம் மற்றும் புதுச்சேரி மதுபானங்கள் கடத்தி வந்து விற்பனை செய்வதாக மாவட்ட எஸ்.பி., ஸ்ரீநாதாவிற்கு புகார்கள் வந்தது. அதன் பேரில் மதுவிலக்கு சோதனை சாவடிகளில் இருந்த போலீசாரை பல்வேறு இடங்களுக்கு மாற்றி அதிரடியாக உத்தரவு பிறப்பித்தார். 

பின் கோட்டக்குப்பம் உட்கோட்டத்தில் மதுவிற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ள மதுவிலக்கு போலீசாருக்கு உத்தரவு பிறப்பித்ததின் பேரில் மது விலக்கு சப்இன்ஸ்பெக்டர் எழுமலை, ஏட்டு மணிகண்டன் ஆகியோர் மரக்காணம் அடுத்த கரிப்பாளையத்தில் உள்ள முந்திரிதோப்பில் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது 22 கேன்களில் 750 லிட்டர் விஷசாராயத்தை மண்ணில் புதைத்து வைத்திருந்தது தெரியவந்தது. இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டதில் கரிப்பாளையத்தை சேர்ந்த லோகு மகன்கள் ஞானவேல், 27, விஜயகுமார், 23 ஆகியோர்கள் பதுக்கிவைத்தது தெரியவந்தது. இது குறித்து மதுவிலக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக உள்ள அண்ணன், தம்பி இருவரை தேடி வருகின்றனர்.