பஞ்சர் கடை தொழிலாளி மர்மமான முறையில் கொலை - போலீசார் விசாரணை

பஞ்சர் கடை தொழிலாளி மர்மமான முறையில் கொலை - போலீசார் விசாரணை

தூத்துக்குடி - திருச்செந்தூர் சாலையில் பஞ்சர் கடை நடத்தி வந்த தொழிலாளியை மர்ம நபர்கள் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

தூத்துக்குடி மாவட்டம் புதுகுளம் பகுதியை சேர்ந்தவர் கருப்பசாமி. இவர் தூத்துக்குடி-திருச்செந்தூர் சாலையில் பஞ்சர் கடை நடத்தி வருகிறார்.

இந்தநிலையில், இவர் கடையில் மர்மமான முறையில் இறந்து கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத சோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லுரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் மர்ம நபர்களை வலை வீசி தேடி வருகின்றனர்.