சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவர் கைது...

11 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவர் கைது...

திருச்சி | மணப்பாறை அருகே துவரங்குறிச்சி பகுதியைச் சேர்ந்த 11 வயது சிறுமி அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 6ம் வகுப்பு பயின்று வருகிறார்.

இந்நிலையில் அந்த சிறுமிக்கு திடீர் என உடல் நலக்குறைவு ஏற்பட்டதைத் தொடர்ந்து மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கபட்டு சிகிச்சை அளிக்கபட்டு வருகிறது.

மேலும் படிக்க | சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவா் தற்கொலை முயற்சி

அச்சிறுமியை மருத்துவர்கள் பரிசோதனை செய்தபோது பாலியர் வன்புணர்வு செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. இதுகுறித்து மணப்பாறை அனைத்துமகளிர் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

அதன் அடிப்படையில் சிறுமியிடம் நடத்திய விசாரணையில் துவரங்குறிச்சி, ஸ்டாலின் நகர் பகுதியைச் சேர்ந்த வெங்கிடசாமி (வயது 58) என்பவர் சிறுமியிடம் அத்துமீறலில் ஈடுபட்டிருப்பது தெரியவந்ததையடுத்து போலீசார் போஸ்கோ சட்டத்தின்கீழ் வழக்குபதிந்து வெங்கிடசாமியை கைது செய்தனர்.

மேலும் படிக்க | மாமா, மாமா மகன் சேர்ந்து 14 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த கொடூரம்...