ஜாதி பெயரை வைத்து காதல் மனைவியை இழிவாக பேசிய கணவர்… வச்சு செய்த போலீஸ்!
ஆரணி அருகே ஜாதி பெயரை வைத்து மனைவியை இழிவாக பேசிய கணவரை போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள மாமனார் மாமியாரை போலீசார் தேடி வருகின்றனர்.
ஆரணி அருகே ஜாதி பெயரை வைத்து மனைவியை இழிவாக பேசிய கணவரை போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள மாமனார் மாமியாரை போலீசார் தேடி வருகின்றனர்.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே உள்ள எஸ்.வி.நகரம் கிராமத்தை சேர்ந்தவர் தனியார் மென்பொருள் கம்பெனி ஊழியர் தமிழரசன். இவருக்கும் அரியப்பாடி கிராமத்தை சேர்ந்த கல்லூரி மாணவிக்கும் முகநூல் மூலம் காதல் ஏற்பட்டது. இதனையடுத்து பெண் வீட்டார் சமதத்துடன் இருவருக்கும் திருமணம் நடைபெற்றது.
திருமணமாகி சில மாதங்கள் பெற்றோர் வீட்டில் இருந்து கல்லூரி மாணவி கடந்த சில நாட்கள் முன்பே மாமியார் வீட்டுக்கு சென்றார். இந்நிலையில் ஜாதி பெயரை வைத்து தன்னை மாமனார், மாமியார் மற்றும் கணவர் இழிவாக பேசியதாக மாணவி ஆரணி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து தமிழரசனை போலீசார் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள அவரின் தாய், தந்தையை போலீசார் தேடி வருகின்றனர்.