சிட்லபாக்கத்தில் வீட்டை உடைத்து திருட்டு; சிசிடிவியில் சிக்கிய அவலம்:

சிட்லபாக்கத்தில் வீட்டை உடைத்து திருட்டு; சிசிடிவியில் சிக்கிய அவலம்:

சிட்லபாக்கம் காவல் நிலையத்துக்கு உட்பட்ட ஜட்ஜ் காலனி பகுதியில் உள்ள வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருடிய நபரின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.

தாம்பரம் சிட்லபாக்கம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட  ஜட்ஜ் காலனி பகுதியில் வசிப்பவர் சரஸ்வதி. இவர் நேற்று  காலை ஆறு மணி அளவில் வீட்டுக்கு அருகாமையில் இருக்கும் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்த பிறகு மீண்டும் காலை 8 மணி அளவில் வீட்டுக்கு வந்து பார்த்துள்ளார். அப்போது வீட்டின் முன் கதவு உடைக்கப்பட்டதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர், வீட்டுக்கு சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த இரண்டு சவரன் தங்க நகைகள், 5000 பணம் காணாமல் போனதை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார்.  

அவர்  உடனடியாக  சிட்லபாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் குற்றவாளிகளை தேடி வந்த நிலையில், 
திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட நபரின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது .அதில் இருசக்கரத்தில் வாங்க வந்தது  நபர் சாலையில் இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு வீட்டுக்குள் திருட செல்லும் சிசிடிவி காட்சிகள் அங்கு பொருத்தப்பட்டுள்ள கேமராவில் பதிவாகியுள்ளது