மது பாட்டில்களோடு கையும் களவுமாக மாட்டிய பெண்கள்!!!

வீட்டில் திருட்டுத்தனமாக மது பாட்டில்களை விற்பனை செய்ய முயற்சி செய்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மது பாட்டில்களோடு கையும் களவுமாக மாட்டிய பெண்கள்!!!

தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே  எச்.புதுப்பட்டியில் வீட்டில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து கள்ளத்தனமாக விற்பனை செய்வதாக  .பள்ளிப்பட்டி காவல் நிலைய காவல் துறையினருக்கு வந்த ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

இதனைத்தொடர்ந்து, அரூர் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் பெனாசிர் பாத்திமா தலைமையில், .பள்ளிப்பட்டி காவல்  நிலைய உதவி காவல் ஆய்வாளர்கள் மாதையன், சக்திவேல் மற்றும் காவல்துறையினர் சேர்ந்து அப்பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது அப்பகுதியில் வீட்டில் மறைத்து வைத்து, சட்ட விரோதமாக மது பாட்டில்களை  விற்பனை செய்த ராணி (45) கந்தாயி (62) என்ற இரண்டு பெண்களைக் கையும் களவுமாகப் பிடித்து கைது செய்துள்ளனர். பின், விற்பனைக்காக அவர்கள் மூட்டையில் மறைத்து வைத்திருந்த சுமார் ரூ 1 லட்சம் மதிப்பிலான 731 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இருவர் மீது வழக்கு பதிவு செய்து பாப்பிரெட்டிப்பட்டி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். யாருக்கும் தெரியாமல் செய்ததாக நினைத்து போலீசிடம் பிடிப்பட்ட அந்த இருவரால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.