காவல் நிலையத்தில் தூக்கில் தொங்கிய காவலர்,..!

காவல் நிலையத்தில் தூக்கில் தொங்கிய காவலர்,..!

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் உதவி காவல் ஆய்வாளார் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நகர காவல்நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வருபவர் ராஜ்குமார் தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த 
இவரும் கந்திலி காவல் நிலையத்தில் பணிபுரியும் சோபியா என்பவரும் கடந்த  2021ம் ஆண்டில் ஒன்றாக காவலர் பயிற்சியின் போது பழக்கம்  ஏற்பட்டு  காதலித்து வந்துள்ளதாக கூறப்படுகிறது

இந்நிலையில் நேற்று இரவு பணியில் இருந்த ராஜ்குமார் சோபியாவுடன்  செல்போன் மூலம் வீடியோ காலில் பேசி கொண்டிருந்ததாகவும் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் மனமுடைந்த ராஜ்குமார்  திடீரென நகர காவல் நிலையத்தில் உள்ள உதவி ஆய்வாளர் அறைக்கு உள்ளே சென்று தாழிட்டு கொண்டு அவர் வைத்திருந்த சால்வையால் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலைக்கு முயற்சித்துள்ளதுள்ளார்.

உடனடியாக  சோபியா வாணியம்பாடி நகர  காவல் நிலையத்திற்கு செல்போன் மூலம் தொடர்பு கொண்டு உதவியாளர் ராஜ்குமார் தற்கொலை செய்து கொள்ள போவதாக பதட்டத்துடன்  தெரிவித்துள்ளார். உடனடியாக காவல் நிலையத்தில் இருந்த காவலர்கள் அறைக்குள் இருந்த உதவி ஆய்வாளரை கூப்பிட்டுள்ளனர். அவர் அறை தாழிட்டுள்ளதால்  காவலர்கள்  கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது மின்விசிறியில் தூக்கில் தொங்குவதற்காக  நின்று கொண்டிருந்த ராஜ்குமாரை மீட்டு சக காவலர்கள் வாணியம்பாடி டிஎஸ்பி விஜயகுமாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

தகவலின் பேரில் வாணியம்பாடி காவல்துறை கண்காணிப்பாளர் விஜயகுமார்  நகர காவல்நிலையத்திற்கு  விரைந்து சென்று காதல் பிரச்சினையால் ராஜ்குமார் தற்கொலைக்கு முயன்றாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிக்க  | வரதட்சணை கொடுமை; குடும்பத்துடன் மேட்டூர் எம்.எல்.ஏ தலைமறைவு!