குறி சொல்பவர் பேச்சை கேட்டு விபரீதம்... 6 மாதக் குழந்தையான பேத்தியை தண்ணீரில் அமுக்கி கொன்ற பாட்டி...

கணவர் உடல் நலம்பெறவேண்டி6 மாத குழந்தையை தண்ணீரில் அமுக்கி கொலை செய்த பேத்தி.

குறி சொல்பவர் பேச்சை கேட்டு விபரீதம்... 6 மாதக் குழந்தையான  பேத்தியை தண்ணீரில் அமுக்கி கொன்ற பாட்டி...

பட்டுக்கோட்டை அடுத்த  மல்லிப்பட்டினத்தை சேர்ந்தவர் நசுருதீன். இவரது 6 மாத பெண் குழந்தை ஹாஜரா. குழந்தை ஹாஜரா அவரது வீட்டின் பின்புறம் உள்ள மீன் வைக்கும் நீர் நிறைந்த பிளாஸ்டிக் தொட்டியில் சந்தேகமான முறையில் இறந்து கிடந்தார். பின்னர் குடும்பத்தினர்  கலந்துபேசி இறந்த  குழந்தையை மல்லிப்பட்டினத்தில்  அடக்கம் செய்தனர். இது குறித்து கிராம நிர்வாக அலுவலர் சேதுபாவாசத்திரம் போலீசில் புகார் செய்ததன்பேரில் போலீசார் சந்தேக மரணம் என வழக்கு பதிந்து விசாரணை செய்ததில், பாட்டிய பேத்தியை கொன்றது அம்பலமாகியுள்ளது.

நசுருதீனின் சின்னம்மா ஷர்மிளாபேகம். இவரது கணவர் அசாருதீன். இவர் வெளிநாட்டில் வேலை பார்த்துவிட்டு ஊருக்கு திரும்பியதிலிருந்து அடிக்கடி உடல் நலம் சரியில்லாமல் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் புதுக்கோட்டை மாவட்டம், கிருஷ்ணாஜிபட்டினத்தில் குறிசொல்லும்  முகமதுசலீம் என்பவரிடம் ஷர்மிளா பேகம் சில நாட்களுக்கு முன்பு குறிபார்த்துள்ளார்.

உனது கணவர் உடல்நலம் குணமடைய உயிர்ப்பலி கொடுக்கவேண்டும் என்று குறிபார்ப்பவர்  சொன்னதாக தெரிகிறது. இதனால் ஷர்மிளாபேகம் தமது வீட்டுக்கு அருகில் உள்ள அக்கா மகன் நசுருதீனின் குழந்தை ஹாஜராவை நள்ளிரவில் தூக்கிச்சென்று தண்ணீர் உள்ள பிளாஸ்டிக் மீன் தொட்டியில் அமுக்கி பலி கொடுத்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து  பட்டுக்கோட்டை தாசில்தார் கணேஸ்வரன் முன்னிலையில் குழந்தையின் சடலம் தோண்டியெடுக்கப்பட்டு பிரேத பரிசோதனை நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து  சேதுபாவாசத்திரம் போலீசார் பாட்டி  ஷர்மிளாபேகம், அவரது கணவர் அசாருதீன், குறிசொல்லும்,  முகமதுசலீம் ஆகியோர் மீது கொலை வழக்குப்பதிவு செய்து  தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.