மோதலில் முடிந்த நண்பர்கள் தின கொண்டாட்டம்: கஞ்சா போதையில் தாக்கிகொண்டதில் ஒருவர் பலி...

ஆந்திரா அருகே நண்பர்கள் தின கொண்டாட்டத்தின்போது கஞ்சா போதையில் இரு தரப்பினர் மோதிக்கொண்டதில் இளைஞர் ஒருவர் பலியான சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

மோதலில் முடிந்த நண்பர்கள் தின கொண்டாட்டம்: கஞ்சா போதையில் தாக்கிகொண்டதில் ஒருவர் பலி...

ஆந்திரா மாநிலம் கிருஷ்ணா மாவட்டம், கீழேஸ்வரம் பகுதியில் விஜயவாடாவை சேர்ந்த ஒரு தரப்பும், உள்ளூரை சேர்ந்த ஒருதரப்பும் தனித்தனியாக நண்பர்கள் தினத்தை கொண்டாடி வந்துள்ளனர். அப்போது கஞ்சா போதையில் இருந்த இரண்டு தரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட வாய்தகராறு, கை கலப்பாக மாறியுள்ளது. இதில் இரு கோஷ்டிகளும் தடி மற்றும் கற்களால் பயங்கரமாக மோதிகொண்டனர்.

இதில் சில இளைஞர்கள் கண்மூடித்தனமாக தாக்கியதில் சம்பவ இடத்திலேயே ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். மற்றொருவர் கவலைக்கிடமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இரண்டு தரப்பு மோதல் குறித்து போலிசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவத்தின் வீடியோ காட்சிகள் வெளியாகிய நிலையில்  அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.