நண்பனை மணமுடித்த தங்கை.. மாந்தோப்பில் வைத்து கத்திக்குத்து.. என்ன காரணம்?

ஓசூர் அருகே தங்கையை காதல் திருமணம் செய்த நண்பனை கத்தியால் குத்திக்கொலை செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

நண்பனை மணமுடித்த தங்கை.. மாந்தோப்பில் வைத்து கத்திக்குத்து.. என்ன காரணம்?

கிருஷ்ணகிரி மாவட்டம் பி.கொத்தப்பள்ளி பகுதியைச் சேர்ந்த சந்தோஷ் மற்றும் முருகேசன் ஆகியோர் பல ஆண்டுகளாக நண்பர்களாக இருந்து வந்தனர்.

இந்நிலையில் முருகேசனின் வீட்டுக்கு அடிக்கடி சென்றபோது அவரின் தங்கை மீனாவுடன் காதல் கொண்ட சந்தோஷ், நண்பனின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்டார். தொடர்ந்து முருகேசனின் வீட்டார் நிலத்தை விற்க முயன்ற போது மீனாவும் தன் பங்கை கேட்கவே, ஆத்திரத்தில் இருந்த முருகேசன் சந்தோஷை கொலை செய்ய திட்டம் தீட்டியதாக தெரிகிறது.

அதன்படி பணிமுடித்து வீடுதிரும்பிக் கொண்டிருந்த சந்தோஷை 12ம் வகுப்பு மாணவன் உள்ளிட்ட இருவருடன் முருகேசன் வழிமறித்ததாக தெரிகிறது. தொடர்ந்து மாந்தோப்புக்குள் தப்பியோடிய சந்தோஷை மூவரும் கத்தியால் குத்தி கொலை செய்தனர். தகவலறிந்து சென்ற போலீசார் உடலை மீட்டதோடு தலைமறைவாக இருந்த 3 பேரையும் கைது செய்தனர்.