ஏடிஎம் இயந்திரத்தில் 15 லட்சம் திருட்டு... கிருஷ்ணகிரி அருகே பரபரப்பு...
ஸ்டேட் வங்கி ஏ.டி.எம் இயந்திரத்தில் இருந்த 15 லட்சம் பணத்தை திருடியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகா மாநிலம் சிக்பல்லாபூர் தாலுகாவில் உள்ள பேரேசந்தரா காவல் சரக எல்லைக்கு உட்பட்ட ஏ.டி.எம் இயந்திரத்தில் இருந்து கொள்ளையர்கள் பணத்தை திருடி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நேற்று நள்ளிரவு நடந்த இந்த சம்பவம் தொடர்பாக ஸ்டேட் வங்கி நிர்வாகம் பேரேசந்தரா காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இந்த புகாரின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தங்களின் விசாரனையை தொடங்கினார்கள். அந்த மையத்தில் இருந்த ஏ.டி.எம் இயந்திரத்தை கனமான ஆயுதத்தை கொண்டு உடைத்த திருடர்கள், பின்னர் அதில் இருந்த பணத்தை கொள்ளையடித்து சென்றனர் என்பது தெரிய வந்தது.
இதன் பிறகு அவர்களின் அடையாளத்தை கான வேண்டும் என்பதற்காக சி.சி.டிவி போலீசார் ஆய்வு செய்த போது அதில் முகமூடி அணிந்த இரண்டு இளைஞர்கள் ஏ.டி.எம் மையத்தில் நுழைவது பதிவாகி இருந்தது. அவர்கள் உள்ளே நுழைந்த பின் அங்கிருந்த இரண்டு சி.சி.டிவி கேமராக்களை சேதப்படுத்திய பின் கொள்ளை முயற்சியில் ஈடுப்பட்டுள்ளனர்.
இதனால் கொள்ளையர்களை அடையாளம் கான் பதில் போலீசாருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது என்றாலும் கொள்ளையடித்த 15 லட்சம் ரூபாயுடன் மாயமான அந்த முகமூடி நபர்களை விரைவில் பிடிப்போம் என்று போலீசார் நம்பிக்கை தெரிவித்தனர்.