பெண் ஊராட்சி செயலாளர் அடித்து கொலை... குடும்ப தகராறில் தம்பி வெறிச்செயல்...

சிவகங்கை மாவட்டம், அரசனூர் அருகே ஊராட்சி செயலராக பணிபுரிந்துவரும் பெண்ணை உடன்பிறந்த தம்பியே வீடு கட்டிய பிரச்ச்னையில் கம்பியால் தாக்கி கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெண் ஊராட்சி செயலாளர் அடித்து கொலை... குடும்ப தகராறில் தம்பி வெறிச்செயல்...

அரசனூரை அடுத்துள்ள கோனார்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் உதயசூரியா. இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் அருகில் உள்ள கல்லூரணி பஞ்சாயத்து அலுவலகத்தில் செயலராக பணிபுரிந்து வருகிறார். இவரது உடன்பிறந்த சகோதரர் ஆசைகண்ணன் பொறியியல் படித்து மஹாலெட்சுமி என்கிற பெண்ணுடன் திருமணமாகி தற்சமயம் டெல்லியில் பணிபுரிந்துவருவதாக கூறப்படுகிறது. 

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் சொந்த ஊர் வந்த ஆசைகண்ணனுக்கும் சகோதரியான உதயசூரியாவிற்கும் இடையே வீடு கட்டியதில் தகராறு இருந்ததாக கூறப்படும் நிலையில் இன்று ஆசைகண்ணன் மனைவி மஹாலெட்சுமிக்கும் உதய சூரியாவிற்கும் இடையே அது சம்பந்தமாக வாய் தகராறு ஏற்பட்ட நிலையில் அது குறித்து கேட்க் சென்ற ஆசைகண்ணன் அங்கிருந்த இரும்பு கம்பியால் உதய சூரியாவை தலையில் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உதய சூரியா மயங்கிவிழுந்து இறந்துள்ளார்.  

இதனை கண்ட அக்கம்பக்கத்தினர் கூச்சலிடவே அங்கிருந்து தம்பி ஆசை கண்ணன் தப்பிச்செல்லவே தகவலறிந்து அங்கு சென்ற பூவந்தி காவல்துறையினர் உதயசூரியவின் பிரேதத்தை கைப்பற்றி சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து இக்கொலை சம்பவம் குறித்து விசாரனை மேற்கொண்டுவருகின்றனர். பஞ்சாயத்து செயலாளரை தனது தம்பியே கம்பியால் தாக்கி கொலைசெய்ததாக கூறப்படும் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.