போதையில் போலீசாரிடம் சிக்கிய நபர்... பெட்ரோல் ஊற்றி தற்கொலைக்கு முயன்ற நபரால் பரபரப்பு...

மதுபோதையில் போலீசாரிடம் சிக்கியதால் ஆத்திரம் - பெட்ரோல் ஊற்றி தற்கொலைக்கு முயன்ற நபர் மீது போலீசார் வழக்குப்பதிவு.

போதையில் போலீசாரிடம் சிக்கிய நபர்... பெட்ரோல் ஊற்றி தற்கொலைக்கு முயன்ற நபரால் பரபரப்பு...

சென்னையில் மதுபோதையில் போலீசாரிடம் சிக்கியதால் ஆத்திரமடைந்து பெட்ரோல் ஊற்றி தற்கொலைக்கு முயன்ற நபர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஈ.வி.ஆர். சாலை அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்ட போலீசார், அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் சென்ற அமைந்தகரை பகுதியை சேர்ந்த சிபி என்பவரை தடுத்து நிறுத்தியுள்ளனர். அவரை சோதனைக்கு உட்படுத்தியபோது அளவுக்கு அதிகமாக மது அருந்திவிட்டு வாகனத்தை இயக்கியது தெரியவந்தது.

இதனையடுத்து, அவர் மீது போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். ஆனால் அந்த நபர் மது அருந்தவில்லை என கூறி போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர் ஆத்திரமடைந்த அந்த நபர், அருகே உள்ள பெட்ரோல் பங்கிற்கு சென்று பெட்ரோலை வாங்கி வந்து, போலீசார் முன்னிலையில் உடலில் பெட்ரோலை ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க போவதாக மிரட்டல் விடுத்தார்.

உடனடியாக பணியில் இருந்த போக்குவரத்து காவலர்கள், அந்த நபர் மீது தண்ணீரை ஊற்றி அவரது தற்கொலை முயற்சியை தடுத்து நிறுத்தினர். இதனையடுத்து சிபி மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.