பணம் கேட்டல் அடி தான்! கடை ஓனரை கட்டையால் அடித்த சம்பவம்!!!
டீ கடையில் சிக்ரெட்டுக்கு பணம் தர மறுத்து உருட்டு கட்டையால் 10க்கும் மேற்பட்ட கும்பல் கண்மூடிதனமாக தாக்கிய சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செங்கல்பட்டு: கேளம்பாக்கம் அடுத்த கழிப்பட்டூர் பகுதியில் உள்ள டீ கடைக்கு சென்ற சுமார் 10க்கும் மேற்பட்டோர் கொண்ட கும்பல் சிக்ரெட் பிடித்துவிட்டு அதற்கு பணம் தர மறுத்துள்ளனர். கடை ஊழியரும் உரிமையாளரும் பணம் கேட்டதற்கு பணம் தர மறுத்து கடை உரிமையாளர் மற்றும் ஊழியர் இருவரை கண்மூடிதனமாக உருட்டு கட்டையால் தாக்கியுள்ளனர்.
மேலும் படிக்க | ‘பெரியார்’ பேர் வைத்தாலே அடிப்போம்!!!- உணவகத்தின் மீதான தாக்குதலால் பரபரப்பு!!!
இதில் கடை உரிமையாளர் 41-வயதான அஸ்புள்ளா, ஊழியர்கள் 35-வயதான காஜாமுகமது, நேப்பாளை சேர்ந்த 54-வயதான பகுதார் ஆகிய மூவரும் கடுமையாக தாக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். இதுகுறித்து பாதிக்கப்பட்ட கடை உரிமையாளர் அஸ்புள்ளா கேளம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததை தொடர்ந்து பாலமுருகன்(19) அன்பரசன்(21) ஆகிய இருவர் கைது. மேலும் பலரை போலீசார் தேடி வருகின்றனர்.
மேலும் படிக்க | 2 குழந்தைகளை கிணற்றில் வீசி கொன்று, தாய் தற்கொலை!!!
இளைஞர்கள் சுமார் 10க்கும் மேற்பட்டோர் உருட்டு கட்டையால் கண்மூடித்தனமாக தாக்கிய சிசிடிவி காட்சி வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.