நீதான் என் படத்தில் நாயகி... பள்ளி மாணவிக்கு ஆசை வார்த்தை கூறி இயக்குநர் பாலியல் வன்கொடுமை

இன்ஸ்டாகிராம் மூலம் காதல் வலையை வீசி நடிகையாக்குவதாக கூறி பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த திரைப்பட இயக்குனர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பபட்டார். 

நீதான் என் படத்தில் நாயகி... பள்ளி மாணவிக்கு ஆசை வார்த்தை கூறி இயக்குநர் பாலியல் வன்கொடுமை

சென்னை அசோக் பில்லர் பகுதியைச் சேர்ந்த +2 மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அவரது தாயார் வடபழனி போலீசாரிடம் புகார் அளித்தார்.

கொரோனா ஊரடங்கு காரணமாக பள்ளி படிப்பை ஆன்லைன் வகுப்பு மூலம் படித்து வருகிறார். என் மகளுடன் இன்ஸ்டாகிராம் மூலம் மதுரவாயல் ஸ்ரீகிருஷ்ணாநகர் 27வது தெருவை சேர்ந்த சத்யபிரகாஷ் என்பவர் பழகி உள்ளார். சத்யபிரகாஷ் திரைப்பட இயக்குநராக பணிபுரிந்து வருகிறார்.

இன்ஸ்டாகிராமில் பழகிய சத்யபிரகாஷ், சினிமாவில் பெரிய நடிகையாக ஆக்குவதாக ஆசைவார்த்தை கூறி நட்பாக பழகி மாணவியிடம் புகைப்படங்களை அவர் கேட்டு வாங்கியுள்ளார். அடுத்த கட்டத்தில் சத்யபிரகாஷ் தன்னுடைய வீட்டிற்கு அழைத்து சென்று நடிகையாக்குவதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

சத்யபிரகாஷை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று  வடபழனி போலீசாரிடம் மாணவியின் தாயார் புகார் அளித்தார். இந்த புகார் குறித்து வடபழனி அனைத்து மகளிர் போலீசார் திரைப்பட இயக்குநர் சத்யபிரகாஷை அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

அதில், சத்தியபிரகாசுக்க திருமணம் ஆகி 7 வயதில் குழந்தை இருப்பதும், கருத்து வேறுபாடு காரணமாக மனைவி மற்றும் குழந்தையை பிரிந்து வாழ்ந்து வருவது தெரியவந்தது. தற்போது சமுதாயம் என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறாராம். இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கமான பள்ளி மாணவியிடம் படத்தில் ஹிரோயின் வாய்ப்பு தருவதாக கூறி தனது வீட்டிற்கு அழைத்து வந்து தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்து தெரியவந்தது. அதைதொடர்ந்து வடபழனி போலீசார் திரைப்பட இயக்குநர் சத்யபிரகாஷ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.