தன்னைத் தானே மாய்த்துக் கொண்ட தம்பதியினர்...காரணம் உள்ளே!

தன்னைத் தானே மாய்த்துக் கொண்ட தம்பதியினர்...காரணம் உள்ளே!

தாம்பரம் அருகே கடன் தொல்லையால் தம்பதியினர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து  போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னை தாம்பரம் அடுத்த சிட்லப்பாக்கம் கல்யாண சுந்தரம் தெருவை சேர்ந்த பொன்னுதாஸ் என்பவர், திருமுடிவாக்கத்தில் ஆட்டோ மொபைல்ஸ் நிறுவனத்தை நடத்தி வந்துள்ளார். இவருடைய மனைவி ஜான்சிராணி குன்றத்தூரில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்துள்ளார். 

இதையும் படிக்க : ”இனி தேவையை அறிந்து டெண்டர் வெளியிட வேண்டும்” - மின்தொடரமைப்புக் கழகம் வலியுறுத்தல்!

இந்நிலையில் ஆட்டோமொபைல்ஸ் நிறுவனம் நடத்துவதற்காக  வங்கி மற்றும் அவருக்கு தெரிந்த பல நபர்களிடம் சுமார் ஒரு கோடி ரூபாய் வரை கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. ஆனால், ஆட்டோ மொபைல்ஸ் நிறுவனத்தில் தொடர்ந்து நஷ்டம் ஏற்பட்டதால் வாங்கிய கடனை திருப்பி கொடுக்க முடியாமல் இருந்து வந்துள்ளார். இதனிடையே, கடன் கொடுத்தவர்கள் கடனை திருப்பி தருமாறு தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. 

இதனால் மன உளைச்சலில் இருந்த கணவன் மனைவி இருவரும், வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளனர். பள்ளி மற்றும் கல்லூரியில் இருந்து வீடு திரும்பிய பிள்ளைகள் பெற்றோர் தூக்கில் தொங்கியதை கண்டு அதிர்ச்சியடைந்து கதறி அழுதுள்ளனர். பின்னர் இதுகுறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் இருவரின் உடலையும் மீட்டு, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.