ஒருவரை நான்கு பேர் சேர்ந்து தாக்கியதால் பரபரப்பு...முன்விரோதம் காரணமா?

ஒருவரை நான்கு பேர் சேர்ந்து தாக்கியதால் பரபரப்பு...முன்விரோதம் காரணமா?

சீர்காழி அருகே முன் விரோதம் காரணமாக ஒருவரை, நான்கு பேர் சேர்ந்து கத்தி உள்ளிட்ட கூர்மையான ஆயுதங்களை கொண்டு தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. 

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே வடகால் கிராமம் காந்திநகரை சேர்ந்த நரேஷ் என்பவருக்கும், அதே கிராமத்தை சேர்ந்த மணிகண்டன், மணிமாறன், விக்னேஷ், நேசமணி ஆகியோருக்கும் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு அந்த பகுதியில் நடந்த கோவில் திருவிழாவில் தகராறு ஏற்பட்டு ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்டு மோதல் சம்பவம் ஏற்பட்டுள்ளது. 

இதனால் ஆத்திரத்தில் இருந்து வந்த அந்த நால்வரும் இன்று வடகால் கடைவீதிக்கு வந்த நரேஷ் மற்றும் அவரது நண்பர்களை, கூர்மையான ஆயுதங்களை கொண்டு பலமாக தாக்கியுள்ளனர். இந்த தாக்குதலின் போது படுகாயம் அடைந்த நரேஷ் மற்றும் அவரது நண்பர்கள் ராஜா, பாக்கியராஜ் உள்ளிட்டோர் சீர்காழி அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

இதையும் படிக்க : ஜோ பைடனுடன் கை குலுக்க தெரிந்த CM க்கு, பாரதியாருக்கு மரியாதை செலுத்த நேரமில்லையா?

முன்விரோதம் காரணமாக இரண்டு தரப்பினரும் தாக்குதலில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தொடர்ந்து, இந்த சம்பவம் குறித்து புதுப்பட்டினம் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் விக்னேஷ் மற்றும் மணிமாறனை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இருப்பினும், இந்த சம்பவம் குறித்த வீடியோ தற்பொழுது சமூக வலைதளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.