சொத்துக்களை ஏமாற்றி எழுதி வாங்கியதாக மகன், மருமகள் மீது புகார்  

தனது சொத்துக்களை ஏமாற்றி எழுதி வாங்கிய மகன் மற்றும் மருமகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, உடல்நிலை சரியில்லாத கணவரோடு ஆம்புலன்சில் வந்து, மூதாட்டி  மனு அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

சொத்துக்களை ஏமாற்றி எழுதி வாங்கியதாக மகன், மருமகள் மீது புகார்   

தனது சொத்துக்களை ஏமாற்றி எழுதி வாங்கிய மகன் மற்றும் மருமகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, உடல்நிலை சரியில்லாத கணவரோடு ஆம்புலன்சில் வந்து, மூதாட்டி  மனு அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

ராமநாதபுரம் மாவட்டம், பொட்டகவயல் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் சண்முகம்-முத்துலட்சுமி தம்பதியினர். இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனர். இந்நிலையல்,  உடல் நலம் சரியில்லாத தனது கணவனை ஆம்புலன்சில் அழைத்து வந்த மூதாட்டி முத்துலட்சுமி, மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு ஒன்றை அளித்தார். அதில், தனது மகன் மற்றும் மருமகள் இருவரும்,  தங்களது முழு சொத்துக்களையும், உயில் என்ற பெயரில் எழுதி வாங்கிக் கொண்டு, உடல் நலம் சரியில்லாத தனது கணவருக்கு சிகிச்சை அளிக்காமல் வீட்டை விட்டு வெளியேற்றியதாகவும், தங்களின் சொத்துக்களை மீட்டு தர வேண்டும் என மனுவில் குறிப்பிட்டுள்ளார்.