பாலியல் தொந்தரவு கொடுத்த நபரை ஆண் நண்பருடன் சேர்ந்து தீர்த்துக்கட்டிய கல்லூரி மாணவி...!

தனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த நபரை, கல்லூரி மாணவி ஆண் நண்பருடன் சேர்ந்து நடுரோட்டில் குத்தி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

பாலியல் தொந்தரவு கொடுத்த நபரை ஆண் நண்பருடன் சேர்ந்து தீர்த்துக்கட்டிய கல்லூரி மாணவி...!

திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்தவர் தேசப்பிரியா. இவர் எஸ்.ஆர்.எம் கல்லூரியில் படித்தபோது பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த செந்தில் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. செந்தில் தனக்கு திருமணம் ஆகவில்லையே என்று கூறி மாணவியிடம் சகஜமாக நட்பை வளர்த்து வந்துள்ளார். 

அதன்பிறகு மேற்படிப்பிற்காக கேளம்பாக்கம் எஸ் எஸ் என். கல்லூரியில் படிக்கும்போது அருண்குமார் என்பவருடன் மாணவிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. மேலும் செந்திலுக்கு திருமணம் ஆனது தெரிந்தவுடன் அவருடனான நட்பை மாணவி தேசப்பிரியா துண்டித்துள்ளார். ஒரு கட்டத்தில் தொடர்ச்சியாக செந்தில் தேசப்பிரியாவை பாலியல் ரீதியாகவும், கல்யாணம் செய்து கொள்ளுமாறும் வற்புறுத்தி உள்ளார். 

அதன்பிறகு தேசப்பிரியா தன் நண்பரான அருண் பாண்டியன் உள்ளிட்டோருடன் கூட்டாக ஒன்று சேர்ந்து செந்திலை கேளம்பாக்கம் நெடுஞ்சாலைக்கு வரவழைத்துள்ளார்.  செந்திலும் நேரடியாக வந்து தேசப்பிரியாவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது. அப்பொழுது தேசப்பிரியாவும், அவரது நண்பருமான அருண் பாண்டியன் ஆகியோர் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து செந்திலை குத்தி கொலை செய்துதுள்ளனர்.

அதனைதொடர்ந்து கொலை குற்றவாளியான சேதப்பிரியா, அருண்பாண்டியனை பிடித்த அங்கிருந்த மக்கள், இருவரையும் காவல்நிலையத்தில் ஓப்படைத்தனர்.போலீசார் இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.