சென்னை கொள்ளை சம்பவம்... ஆந்திர கொள்ளையர்கள் காரணமா?!!

சென்னை கொள்ளை சம்பவம்... ஆந்திர கொள்ளையர்கள் காரணமா?!!

பெரம்பூர் நகைக்கடையில் ஓட்டைப்போட்டு 9 கிலோ தங்க நகைகள் கொள்ளையடித்த கும்பல் ஆந்திரா கொள்ளையர்களா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெரம்பூரில் உள்ள நகைக்கடையில் வெல்டிங் மிஷினால் கடையை ஓட்டைப்போட்டு கடந்த வாரம் ஒரு கும்பல் 9 கிலோ தங்க நகைகள் மற்றும் 20 லட்சம் வைர நகைகளை கொள்ளையடித்து சென்றது.  இந்த கும்பலை தனிப்படை வைத்து போலீசார் தேடி வருகின்றனர்.

இந்நிலையில் இதே போல ஒரு சம்பவம் கடந்தாண்டு ஆந்திரா விஜலாபுரம் மாவட்டத்தில் உள்ள வங்கி ஒன்றில் நடந்தேறி உள்ளது.  பல லட்சம் கொள்ளையடித்த வழக்கில் ஆந்திரா கொள்ளையர்கள் 9 பேரை ஆந்திரா போலீசார் கைது செய்தனர். 

இதே கும்பல் பெரம்பூர் நகைக்கடையிலும் கைவரிசை காட்டியுள்ளதா என்ற கோணத்தில் போலீசார் தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர். 

குறிப்பாக பெரம்பூரில் நடந்த கொள்ளை சம்பவத்தின் புகைப்படத்தை ஒப்பிட்டு ஆந்திர மாநில போலீசாருக்கு சென்னை தனிப்படை போலீசார் அனுப்பி உள்ளனர்.  இதே கும்பல் கொள்ளையில் ஈடுபட்டுள்ளதா என்பதை விசாரிக்க சென்னை தனிப்படை போலீசாரும் ஆந்திராவிற்கு விரைவில் வந்து விசாரணை நடத்த உள்ளனர்.

இதையும் படிக்க:   விசாரணைக்கு வந்த பொள்ளாச்சி வழக்கு..... எடப்பாடிக்கு வழங்கப்பட்ட தீர்ப்பு என்ன?!!!